வெள்ளி, 14 ஜூன், 2013

ஜும் ஆ









ஜும்
மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை கண்டு
மலக்குகளே ஏங்கும் நாள்...
பணம் கொண்டு வருடம் ஒருமுறை கிடைக்கும் நன்மைகளை
மனம் கொண்டு வாரம் ஒரு முறை பெற
அல்லாஹ் அளித்த வரம்

ஒட்டகத்தின் ஒருபகுதியை தானம் கொடுக்க
ஓராயிரமாவது வேண்டும்.
ஏக்கமாகிப்போன ஏழைகளுக்கு
வாரம் ஒரு முழு ஒட்டகத்தின் நன்மை
கற்பனைக்கு அப்பால் உள்ள புனித பயணம்
கண்ணுக்கு முன்னாள் நிறைவேறும் அதிசயம்..
ஏழைகளின் ஹஜ்,

இவ்வளவு நன்மையும் இன்றே கிடைக்குமென்றால்
அது
இஸ்லாமியர்களின் பெருநாள் தானே.

வியாழன், 13 ஜூன், 2013

வரம்



ஒவ்வொரு விழித்தலின் பின்னும் பாவ மன்னிப்பிற்கான பாதை திறந்தே கிடக்கிறது....
அடுத்த உறக்கம் என்பது மரண தழுவலாய் கூட மாறிவிடலாம்.....
இந்த நிமிடம், இந்த இருப்பு, இந்த சுவாசம்...
அல்லாஹ் கொடுத்த வரம்..
பாவமன்னிப்பு ஒன்றே தவம்
பிழைத்துக் கிடப்பதே வரம்.

மாறி விட வேண்டும்






மாறிவிட வேண்டும்,
வண்ணங்களின் கூட்டத்தில் நிறமாய்
பூக்களின் தோட்டத்தில் மணமாய்
பறவைகளின் பயணத்தில் சிறகுகளாய்
குழந்தைகளின் உலகத்தில் புன்னகையாய்
நிலத்தில் வீழ்ந்த பின்பும் தன்னியல் மாறா மழையாய்
மாறிவிடத்தான் வேண்டும்.


போதை மரம்.





இங்கே வானம் 
நிறைய  பேருக்கு - போதி மரம் 

ஆனால் - எனக்கோ 
போதை மரம்.

மேகம் தழுவிய வானத்தோடு 
மோகித்து கிடக்கிறேன் ..

மேகம் கழுவிய வானத்தோடு 
ஊடலாகிறேன் ..

வானம் பார்த்து சில சமயம் 
கதறி அழுகிறேன் ...

வானம் பார்த்து  சில சமயம் 
சிரித்து மலர்கிறேன் .



இங்கே வானம் 
நிறைய  பேருக்கு - போதி மரம் 

ஆனால் - எனக்கோ 
போதை மரம்.


கூடு







 இந்த உலகம் இறைவனின் கூடே..

தற்காலிகமாய்,
தங்கிச் செல்லும் பறவைகளே நாங்கள்...

கருணையின் கரங்கொண்டு காப்பவனே,
சிறகு கொடு...