முத்துப்பேட்டையின் முகவரி........
ஒரு தனி மனிதனின்
நம்பிக்கையில் தொடங்குகிறது.
இந்த வெற்றியின் முதல் வரி...
அல்லாஹ்வின் மீது கொண்ட
அசையாத நம்பிக்கை
தோல்விகளில் கற்றுக்கொள்ளும்
துவளாத மனசு...
உயரங்களில் கூட
தரையில் அழுந்த நிற்கும் பாதங்கள்...
பணங்களை எண்ணும் போதே
பசித்தவர்களையும் எண்ணும்
பரோபாகாரம்........
காற்றெங்கும் காந்த அலைகளாய்
பரவிக்கிடக்கும் இவருக்கான துஆக்கள்
பல பாடங்கள் சில வெற்றிகளை நிச்சயிக்கிறது.....
சில வெற்றிகள் பல பாடங்களை பதிவு செய்கிறது.....
இந்த வெற்றியின் பெயர்
ஹைதர் அலி............







